இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவை கலக்கி வருபவர் சசிகுமார். இவருடைய இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சுப்பிரமணியபுரம். இத்திரைப்பதில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படம் படித்த வேலை இல்லாத இளைஞர்கள் அரசியல்வாதிகளின் தன்னலத்துக்காக பயன்படுத்தப்பட்டு வீணாவது, காதல் நட்பில் உள்ள துரோகம் குறித்து கதை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்தவகையில் தற்போது படத்தின் இயக்குநர் சசிகுமார் படம் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். "அதில் ஜூலை 4 ஸ்பெஷலான நாள். 14 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் சுப்பிரமணியபுரம் ரிலீசானது. நேற்று நடந்தது போல இருக்கிறது.
இன்று வரை ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடுவதை எண்ணி மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.
Listen News!