பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை குடும்பம் சகிதம் பலரும் விரும்பிப் பார்த்து ரசித்த தொடர் தான் 'மெட்டி ஒலி'. இந்த சீரியலையும் அதில் வரும் 'அம்மி அம்மி மிதித்து' என்ற பாடலையும் இன்றளவிலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் சுவாரஸ்யம் குறையாமல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் இந்த சீரியலின் வாயிலாக ஒளிபரப்பியிருந்தார்கள்.
மேலும் யதார்த்தம் மீறாமல், சீரியலுக்கான மிகைப்படுத்தல் இல்லாமல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த இந்த சீரியலை மீண்டும் பார்க்க பலரும் விரும்பினார்கள். இதனால் கொரோனா காலத்தில் இந்த தொடர் Re Telecast செய்யப்பட்டது.
இந்நிலையில் 'மெட்டி ஒலி' சீரியல் ரசிகர்களுக்கு தற்போது மற்றுமோர் குட் நியூஸ் வெளிவந்துள்ளது. அதாவது மெட்டி ஒலி தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாகவும், 2 வாரத்தில் இதற்கான சூட்டிங் ஆரம்பிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
Listen News!