தமிழ் சினிமாவில் 80களில் பிரபல்யமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் மோகன். இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் மைக்கை பிடித்துக்கொண்டு பாட்டு பாடுவார் என்பதால் இவருக்கு மைக் மோகன் என பெயர் வந்தது. இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் பேவரிட்டாக இருந்ததும் முக்கியமாகும்.
90களுக்கு பின் இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது. கடைசியாக இவர் ஹீரோவாக நடித்த ‘சுட்ட பழம்’ திரைப்படம் 2008ம் வருடம் வெளியானது. கடந்த 15 வருடங்களாக அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இப்போது ‘ஹரா’ என்கிற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது.
கடந்த 15 வருடங்களில் அவருக்கு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் அதாவது ஹீரோவின் அப்பா, அண்ணன், வில்லன் என வேடங்கள் அவரை தேடி வந்தது. ஆனால், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறிவிட்டார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், இப்போதும் நான் ஹீரோதான் என சொல்லி மறுத்துவிட்டாராம். அதேபோல், வாரிசு படத்திலும் விஜய்யின் அண்ணன்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
Listen News!