கடந்த 2009 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'நியூட்டனின் மூன்றாம் விதி' படத்தை இயக்கியவர் தாய் செல்வம்.இவர் இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வெளியான விஜய் டிவியின் மௌனராகம் சீரியல் மூலம் சின்னத்திரையில் தொடர்களை இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கிய மௌனராகம் சீரியல் 863 எபிசோடுகள் சென்ற நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு வெளியான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 579 எபிசோடுகள் வரை சென்றது.
ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டு நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 என்ற பெயரில் புதிய சீரியல் தொடங்கப்பட்டது.மேலும், காத்து கருப்பு, கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன் உள்ளிட்ட தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்.
இந்த நிலையில் தாய் செல்வம் இயக்கிய கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக நடித்து புகழ் பெற்ற நடிகை பிரியா பவானி ஷங்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் இயக்குநர் தாய் செல்வத்தின் மறைவு என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டுசெல்கிறது. கோபக்காரர் என அறியப்படும் இவர், என்னை தவறுகள் செய்து அதிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதளவில் வெறுமையாக உணர்கிறேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.இவரின் பதிவு தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
The demise of ThaiMuthu Selvam sir the director of KMKV, brings back so many memories.The man was known for his temper but to me he was always patient letting me do mistakes&learn.After a very long time,I feel empty inside me,not knowing what to say&how to feel. Rest in peace sir pic.twitter.com/fyMB9oJQQX
Listen News!