• Sep 20 2024

மிரள் பட இயக்குநரை பாம்பு கடித்த சம்பம்- தற்பொழுது அவருடைய நிலை என்ன தெரியுமா?- பரபரப்பில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

பரத், வாணி போஜன்,  கே.எஸ்.ரவிகுமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் மிரள்.இயக்குநர் M.சக்திவேல் இயக்கத்தில் உருவான இப்படமானது  கடந்த நவம்பர் 11-ஆம் தேதி வெளியானது.

த்ரில்லர் படமாக வெளியான இந்த படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிட்டிருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.இந்நிலையில் இதுகுறித்து இயக்குநரிடம் கேட்டறிந்தபோது,  பள்ளிக்கரணையை சேர்ந்த தான், சென்னை அருகே உள்ள துரைப்பாக்கத்தில் மாமனார் வீட்டுக்கு சென்றிருந்ததாகவும், அப்போது  மருந்து ஆர்டர் செய்து வெகுநேரம் ஆகியும் மர்ந்து வரவில்லை என்பதால், மருந்து வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, தன்னை பாம்பு ஒன்று கடித்துவிட்டு ஓடிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.


மேலும் தற்போது பூரண நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மழை நேரத்தில் பாம்புகள் அந்த பகுதியில் வெளிவந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் இந்நேரத்தில் தன்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பலருக்கும் நன்றி தெரிவித்தார்.

அத்தோடு  “திரையரங்கில் வெளியானபோதே மிரள் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. தற்போது படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் மிஸ் பண்ணியவர்கள் இப்போது ஓடிடியில் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.தொடர்ந்து அடுத்த திரைப்படத்துக்கான செயல்பாடுகளை செய்துவருவதாகவும், விரைவில் அவைகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement