சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மிர்ச்சி செந்தில். மேலும் இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகவிருக்கும் சீரியல் தான் 'அண்ணா'.
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நித்யா ராம். மேலும் ரித்திகா மிர்ச்சி செந்தில் தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறுஇருக்கையில், அண்ணா சீரியலின் முதல் ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பார்க்கும் பொழுது மிர்ச்சி செந்திலுக்கு மூன்று தங்கைகள் இருகிறார்கள் என தெரிகிறது.
ஆனால், இதில் ரித்திகாவை மட்டும் காட்டவில்லை. இனி வரும் ப்ரோமோக்களில் ரித்திகா இடம்பெறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் ப்ரோமோ மூலமாகவே ரசிகர்களை கவர்ந்துவிட்டார் மிர்ச்சி செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த ப்ரமோ வீடியோ..
Listen News!