விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதில் டூர் போன இடத்தில் ஈஸ்வரியைத் தவறவிட்டுவிட்டார் பாக்கியா. அத்தை அத்தை எனக் கத்தியும் ஈஸ்வரிக்கு கேட்கவில்லை, மறுபுறம் ஈஸ்வரியும் பாக்கியா பாக்கியா எனக் கத்திக்கொண்டு அவர்களைக் காணாது தேடி அழுகின்றார்.
இதனையடுத்து இனியா கோபிக்கு கால் பண்ணி "பாட்டியைக் காணல அப்பா" எனக் கூறி அழுகின்றார். இதனைக் கேட்டதும் கோபி அதிர்ச்சியடைகின்றார். எங்கு போய் தேடுவார்கள் என நினைத்துக் கோபியும் குழம்பிப் போயுள்ளார்.
எங்கு தேடியும் பாக்கியா ஈஸ்வரியைக் காணவில்லை. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Listen News!