• Sep 20 2024

காணாமல் போன ரோகிணி.. ஆத்திரத்தில் முத்துவுடன் சண்டை போட்ட மனோஜ்! பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிகை ஆசை. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி ஏற்கனவே, மனோஜ் வேளைக்கு போகாமல் பார்க்கில் படுத்து உறங்குவதை எல்லாருக்கும் முத்து வீடியோ போட்டு தெரியப்படுத்துகிறார். இதை பார்த்த அனைவரும் மனோஜ்க்கு திட்டுகின்றனர். ரோகிணியும் சண்டை போடுகிறார்.


இதை தொடர்ந்து, நண்பியின் வீட்டுக்குச் சென்ற ரோகிணி நடந்தவற்றை எல்லாம் சொல்லி அழுகிறார். அதன்பின் அவரின் நண்பி ரோகிணிக்கு டீ போட்டு எடுத்து வந்து பார்த்தால், ரோகிணியை காணவில்லை.

இதையடுத்து, அவரும் பதறிப்போய் மனோஜ்க்கு போன் பண்ணி நடந்தவற்றை சொல்லுகிறார். ரோகிணியை காணவில்லை என அறிந்த மனோஜ், எல்லாம் உன்னால தான் என முத்துவுடன் சண்டை போடுகிறார்.


இறுதியாக அனைவரும் சேர்ந்து ரோகிணியை தேடுகின்றனர்.  

Advertisement

Advertisement