• Sep 21 2024

Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜோடி..சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த மூன்று சீசன்களாக வெற்றிகண்ட Mr. and Mrs. சின்னத்திரை தற்பொழுது 4வது சீசன் ஒளிபரப்பாகின்றது.

சின்னத்திரைப் பிரபலங்கள் தமது கணவன் மற்றும் மனைவியுடன் பங்குபற்றும் இந்த நிகழ்ச்சியினை மா கா பா ஆனந்துடன் இணைந்து நிஷாவும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கோபிநாத் மற்றும் தேவதர்சினி ஆகியோர் இருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி, மகாலிங்கம் - ராஜேஸ்வரி, சிங்கப்பூர் தீபன் - சுகன்யா, ரஹ்மான் - ஃபரிணா, மதன் - ரேஷ்மா, யோகி - சத்யா, பிரவீன் - ஐஸ்வர்யா, ராம் - ஜானு, ஸ்ரீகுமார் - அணிலா, வசந்தகுமார் - ரேகா என மொத்தம் 10 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள்.

மேலும்  இதில் அஜய் கிருஷ்ணா - ஜெஸி ஜோடி அவர்களே நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டனர். அதன்பின் நடந்த எலிமினேஷன் சுற்றில் யோகி - சத்யா ஜோடி எலிமினேட் ஆனார்கள்.

இதை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற Mr. And Mrs. சின்னத்திரை எலிமினேஷன் சுற்றில் நடிகை அணிலா - ஸ்ரீகுமார் ஜோடி எலிமினேட் ஆகியுள்ளார்கள். 



நடிகை அணிலா விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரபாகி வரும் பாவம் கனேசன் சீரியலில் அம்மா கேரக்டரில்  நடித்து வருகிறார் என்பதும், இதற்குமுன் சின்னத்தம்பி சீரியலில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement