• Sep 20 2024

தனத்தை திருச்சிக்கு கூட்டிட்டு போக முல்லையும் மீனாவும் போட்ட புது பிளான்- கண்ணனை தடுத்து நிறுத்திய ஜீவா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ஜீவா லஞ்சம் வாங்கிய எல்லோருடைய பணத்தையும் திரும்பக் கொடுக்க கண்ணனையும் கூட்டிக் கொண்டு போகின்றார். கண்ணனும் மன்னிப்புக் கேட்டு பணத்தை எல்லாம் திரும்பக் கொடுத்து விடுகின்றார். மறுபுறம் தனம் குழந்தையை வைத்திருக்கும் போது மீனாவின் அப்பா அம்மா வந்து பார்க்கின்றார்கள்.

அப்போது மீனாவின் குழந்தை கயல் மீனா கூப்பிட்டும் மீனாவிடம் சேர மறுக்கின்றது. அப்போது மீனாவின் அம்மா நீ வீட்டுக்கு வந்து எவ்வளவு நாளாச்சு அப்போ உன் பொண்ணு மறக்காமல் என்ன பண்ணுவா என்று கேட்கின்றார். மீனா கயலைத் துாக்கி வைத்து கொஞ்சிக் கொண்டு இருக்கின்றார். தனத்தை கவனமாக இருக்கச் சொல்லி மீனாவின் அம்மா அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.


அதற்கு தனத்தின் அம்மா மீனா நல்ல பொண்ணு எல்லோருடைய பிரசவத்தையும் அவ தான் கவனிச்சுக்கிறாள், அவ இல்லை என்றால் ரொம்ப கஷ்டப்பட்டிருப்போம் என்று மீனாவைப் பற்றி புகழ்கின்றார். இதைக் கேட்டு மீனாவின் அப்பாவும் அம்மாவும் சந்தோஷப்படுகின்றனர்.தொர்ந்து கண்ணனும் ஜீவாவும் கடையில் டீ குடிக்கின்றனர்.

அப்போ கண்ணன் ஒரு தடவை நானும் ஐசுவும் இருந்த வீட்டுக்கு போனும் அங்க இருந்த எல்லாப் பொருட்களையும் எடுத்து குறைஞ்ச விலைக்காவது வித்திட்டு மற்றவங்களுக்கு பணத்தைக் கொடுப்போம் என்று சொல்ல ஜீவா அதெல்லாம் ஒன்றும் வேணாம் பொறுமையா எல்லாத்தையும் பார்த்துக்கலாம் என்கின்றார்.


பின்னர் முல்லையும் மீனாவும் தனத்தை எப்படி ரீட்மென்டிற்காக திருச்சிக்கு கூட்டிட்டு போறது என்று பிளான் போடுகின்றார்கள். பின்னர் எக்ஸ்சாம் திருச்சியில் இருப்பதாக பேப்பரில் பார்த்த முல்லை மீனாவிடம் கொண்டு போய் காட்ட மீனாவும் நான் எக்ஸ்சாம் எழுதிறது என்றால் யாலும் நம்பமாட்டாங்க, நீங்க எழுதிறது என்று சொல்லுங்க, அப்பிடி சொல்லிட்டு ரீட்மென்டுக்னு போகலாம் என்று சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த முல்லை  பின்னர் ஓஓகே சொல்கின்றார். பின்னர் தனத்திடம் சென்று இந்த விஷயத்தைச் சொல்கின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement