• Sep 20 2024

ஐஸ்வர்யா வட்டிக்குப் பணம் வாங்கியதை அறிந்த முல்லை மற்றும் தனம்- இனி நிகழப்போவது என்ன- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தனம் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த விஷயம் மீனாவுக்கு மட்டுமே தெரியும். இதனால் எப்போது வீட்டிலுள்ளவர்களுக்கு உண்மை தெரிய வரும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா தனது வளைகாப்புக்காக சித்தியிடம் வாங்கிய பணத்தை கொடுக்கும் போது முல்லை கண்டு விடுகின்றார்.


இதனால் முல்லை தனத்திடம் வந்து ஐஸ்வர்யா அத்தாச்சியிடம் கட்டுக்கட்டா பணம் கொடுக்கிறா என்ன என்று விசாரியுங்க என்று சொன்ன போது தனம் தனது அண்ணியிடம் கூப்பிட்டு ஐஸ்வர்யா உங்க கிட்ட பணம் வாங்கினாலா என்று கேட்க முதலில் மறுத்த அவர் பின்னர் வளைகாப்புக்காக ஐஸ்வர்யா பணம் வாங்கியதாக சம்மதிக்கின்றார்.

பின்னர் தனம் ஐஸ்வர்யாவைக் கூப்பிட்டு விசாரிக்க ஐஸ்வர்யாவும் சம்மதிக்கின்றார். இதனால் முல்லையும் தனமும் அதிர்ச்சியடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement