• Sep 20 2024

மீனாவிடம் துருவித் துருவி கேள்வி கேட்கும் முல்லை- தனம் எடுத்த முடிவு- குழப்பத்தில் ஐஸ்வர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹாஸ்பிட்டலில் தனத்திற்கு ரீட்மென்ட் ஆரம்பிக்கணும், அதற்கு முதல் குழந்தையை ஆபரேஷன் பண்ணி எடுக்கணும் என்று சீக்கிரமாக இந்த விஷயத்தை வீட்டில சொல்லுங்க என்று சொல்ல தனமும் மீனாவும் அதிர்ச்சியடைகின்றனர். பின்னர் இருவரும் கோயிலுக்குச் சென்று இருக்கின்றனர்.


அப்போது மீனா அக்கா உங்களுக்கா இப்படி நடக்கனும் என்று கதறி அழுகின்றார். அப்போது தனம் எங்கட குடும்பம் கூட்டுக்குடும்பம் நான் போனதுக்கு அப்பிறம் நீயும் முல்லையும் தான் குடும்பத்தைப் பார்க்கனும் என்று சொல்ல, மீனா அப்படி எல்லாம் சொல்லாதீங்க அக்கா உங்களுக்கு தான் குணப்படுத்த முடியும் என்று டாக்டர் சொல்லி இருக்கின்றாரே என்று சொல்கின்றார்.

அப்போது தனம்,இதை யாருக்கும் இப்போதைக்கு சொல்லாத ஐஸ்வர்யாவின் வளைகாப்பு முடிய எல்லோருக்கும் நானே சொல்லுறேன் என்று சொல்கின்றார். அப்போது மீனாவும் சரி என்று சொல்லி சமாளிக்கின்றார். இருவரும் வீட்டுக்கு வர முல்லையும் ஐஸ்வர்யாவும் என்ன ஆச்சு அக்கா என்று கேட்க தனம் சமாளிக்கின்றார்.


பின்னர் தனம் ரூமுக்குள் போயிருக்கும் போது மீனா கவலைப்படாதீங்க அக்கா எல்லாம் சரி ஆகிடும் என்று சொல்லி விட்டு வெளியே வர முல்லை அக்காவுக்கு ஏதும் உடம்பு சரியில்லையா என்று கேட்க மீனா அக்காக்கு வயது கொஞ்சம் ஆகிடுச்சு தானே அதனால தான் குழந்தை பிறக்கிறதில கொங்சம் சிக்கல் இருக்கு அதான் டெஸ்ட் எடுத்திட்டு வந்தோம். அதில கொஞ்சம் சிக்கல் இருக்கு என்று சொல்ல ஐஸ்வர்யாவும் முல்லையும் அதிர்ச்சியடைகின்றனர்.

அப்போது முல்லை இது தானா இல்லாட்டி ஏதும் மறைக்கிறீங்களா என்று கேட்க மீனா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement