விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
ஐஸ்வர்யா வீட்டுக்கு தனம் வந்து பேசியதால் ஐஸ்வர்யா மீனாவுக்கு போன் செய்து அதுக்குள்ள போட்டுக் கொடுத்திட்டீங்களா என மீனாவைக் கேட்க, மீனா நீ பழசு எல்லாத்தையும் மறந்திட்டு பேசாத எப்பிடி உன்னால இப்படி நடந்து கொள்ள முடியுது எனத் திட்டுகின்றார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா போனை வைத்ததும் மீனா தன்னுடைய அப்பா அம்மா முன்னாடி போய் நடந்ததைக் கூறுகின்றார்.
இதனால் அவர்கள் ஐஸ்வர்யா தான் சரி பார்த்தியா அவ எப்பிடி புருஷனை பிரிச்சுக் கொண்டு போய்ட்டா என்று உனக்கு தான் எதுவுமே தெரில என்று அட்வைஸ்ட் பண்ண மினா அங்கிருந்து எழும்பி சென்று விடுகின்றார். பின்னர் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது முல்லை, தனம் ஐஸ்வர்யா வீட்டுக்கு போனதை பற்றி சொல்கின்றார்.
அப்போது மூர்த்தி அவர் தான் ஒரு மாதத்தில குடும்பத்தை எப்படிப் பார்த்துக்கிறது என்கிற அளவுக்கு வந்திட்டாரெ அப்பிறம் நீ எதுக்கு போனாய் நீ திருந்தவே மாட்டியா என தனத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் தனத்தின் அண்ணி கஸ்துாரி வந்து கண்ணன் ஐஸ்வர்யாவின் கதையை எடுக்கின்றார்.
இதனால் கடுப்பான மூர்த்தி அவங்க பற்றி பேசாமல் இருக்க சொல்லவும் கஸ்துாரி ஐஸ்வர்யா வீடு கட்டிற பங்கை பிரிச்சுத் தரச் சொல்லிக் கேட்கிறா அதனால் செம கோபத்தில் முல்லை ஐஸவர்யாவைத் திட்டியதோடு நேராக வரச் சொல்லுங்க சொத்து பிரிக்கிறது பற்றி பேசுவோம் என்று சொல்ல கஸ்துாரி நேராக ஐஸ்வர்யா வீட்டுக்குச் சென்று இது பற்றி கூறுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!