விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் கதிர் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தது முல்லைக்கு பிடிக்கவே இல்லை. இதனால் முதல் திட்டிக் கொண்டே இருக்க தனம் சமாதானப்படுத்துகின்றார். பின்னர் இருவருக்கும் தனமும் முல்லையும் சாப்பாடு வழங்குகின்றனர்.இருவரும் தயங்கி தயங்கி சாப்பிடுகின்றனர்.
தொடர்ந்து மீனா வீட்டில் ஜனர்த்தனன் கதிரை வெளியே எடுக்க தன்னுடைய படம் தான் உதவியதாக நினைத்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் ஜீவா பணத்தை எடுத்துக் கொண்டு வந்து நான் பணம் கட்டல அண்ணாவே மாறி கட்டிடுச் என்று சொல்கின்றார். இருந்தாலும் ஜனார்த்தனன் எப்போதும் கொஞ்மாவது பணம் கையில வைச்சிருக்கனும் என்று ஜீவாவுக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.
பின்னர் தனம் முல்லை ஐஸ்வர்யா கண்ணன் ஆகியோர் இருந்து பேசிட்டு இரு்கும் போது முல்லையிடம் கண்ணன் பேச முல்லை திட்டுகின்றார். அவகள ஜெயிலுக்கு அனுப்பட்டு வளைகாப்பு நடக்காதது தான் இப்ப பிரச்சினையா என திட்ட கண்ணன் சமாதானப்படுத்த முயலவும் முல்லை கடும் கோபத்தில் திட்டுகின்றார்.
பின்னர் முல்லை மீனாவிடம் போனில் பேச கண்ணனை கதிர் கூட்டிட்டு வந்த விடயத்தை முல்லை மீனாவிடம் சொல்கின்றார் அவங்க அப்படி வெட்கம் இல்லாமல் வந்திட்டாங்களே மாமாவுக்கு தெரிஞ்சால் என்ன ஆகிறது மாமா வந்ததுதம் பிரச்சினை ஏதும் நடக்காமல் இருந்தால் சரி என்று சொல்கின்றார்.மூல்லையிடம் மீனா பேசி முடிந்ததும் ஜீவா வந்து என்ன என்று கேட்கின்றார்.
அதற்கு கதிர் செய்த விஷயத்தை மீனா சொல்ல ஜீவா முதலில் அண்ணா திட்டும் அப்பிறம் எல்லாம் சரி ஆகிடும் என்று கூறி சந்தோஷப்பட்டுச் செல்கின்றார். தொடர்ந்து வீட்டுக்கு மூர்த்தி வர கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஒழிந்து கொள்கின்றனர். தனம் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!