• Sep 20 2024

தனத்திற்கு சிசேரியன் பண்ணியே ஆக வேண்டும் என்பதற்காக புது பிளான் போட்ட முல்லை மற்றும் மீனா- குழப்பத்தில் மூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

தனத்திற்கு ஆப்பரேஷன் செய்ய மூர்த்தி மறுப்புத் தெரிவிக்கின்றார். இதனால் மீனாவும் முல்லையும் அதிர்ச்சியடைகின்றனர்.அத்தோடு தனத்தின் அம்மா டாக்டர் தான் வெளியூருக்கு போகனும் என்பதற்காக இப்படி அவசரப்பட்டுக் கொண்டிருந்தால் அவங்களுக்காக தனத்தையும் பிள்ளையையும் இழக்க முடியுமா என்று கேட்க தனத்தின் அண்ணாவும் தனத்தை வேற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.


இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முல்லையும் மீனாவும் தனத்திடம் சென்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.வெளில எல்லாமே தப்பா நடக்குது டாக்டரையும் பேசிட்டு இருக்கிறாங்க, உங்களை வேற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகனும் என்று பேசிட்டு இருக்கிறாங்க என்று சொல்ல தனமும் அதிர்ச்சியடைகின்றார். அத்தோடு தனம் வேற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனால் உண்மை எல்லாம் தெரிஞ்சிடுமே என்று சொல்லி பயப்பிடுகின்றார்.

இதனால் முல்லையும் மீனாவும் பயப்பிடாதீங்க அக்கா ஏதாவது பண்ணுவோம் என்று வெளியில் வந்து டாக்டரிடம் மீண்டும் பேசிப் பார்க்கின்றனர். எங்களுக்காக ஏதாவது பொய் சொல்லி ஆப்பிரேஷனுக்கு சம்மதிக்க வையுங்க என்று சொல்ல டாக்டர் என்னால் பொய் சொல்ல முடியாது சொல்லி அனுப்பி விட இருவரும் என்ன செய்வது என்று வெளியில் வந்து யோசிக்கின்றனர்.


பின்னர் ஜீவாவிடம் முல்லையும் கதிரிடம் மீனாவும் சென்று பேசுகின்றனர்.மூர்த்தி மாமாவ எப்படியாவது நீங்க தான் பேசி சம்மதிக்க வைக்கனும் சிசேரியன் என்றால் முதல் மாதிரி பயப்பிடத் தேவையில்லை, இப்போ காலம் எல்லாம் மாறிடுச்சு என்று சொல்ல இருவரும் சரி நாங்க அண்ணாகிட்ட பேசிப் பார்க்கிறோம் என்று சொல்கின்றனர்.

தொடர்ந்து வீட்டில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் பேசிட்டு இருக்கின்றனர். அப்போது கஸ்துாரி வந்து காபி கொடுக்கும் போது கண்ணன் ஜெயிலுக்கு போன விஷயத்தைச் சொல்லி குத்திக்காட்ட ஐஸ்வர்யா திட்டுகின்றார். பின்னர் ஐஸ்வர்யா வீடியோ எடுப்போம் வாங்க என்று சொல்ல கண்ணன் ஐஸ்வர்யாவைத் திட்டி விட்டுச் செல்ல ஐஸ்வர்யா தனியாக வீடியோ எடுக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. பின்னர் நாளைய எப்பிஷோட்டிற்கான ப்ரோமோவும் வெளியானது. அதில் டாக்டர் வந்து தனத்திற்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement