• Sep 20 2024

கஸ்தூரி முன்னாடி தனம் பற்றி பேசி சிக்கிக் கொண்ட முல்லை- டாக்டர் கூறிய அதிர்ச்சித் தகவல்- ரீட்மென்ட் வேண்டாம் என்று முடிவெடுத்த தனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

தனத்தைப் பார்க்க மூர்த்தியும் தனத்தின் அம்மாவும் முல்லை, மீனா ஆகியார் வந்திருந்தனர். அப்போது மூர்த்தி காலையிலேயே வந்திட்டீங்க வீட்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வந்திருக்கலாம் தானே என்று சொல்ல முல்லை, பரவாயில்ல மாமா என்று சொல்கின்றார். தொடர்ந்து தனம், மூர்த்தி போனதும் இவங்க ரெண்டு பேரும் இருக்கட்டும் நீ வெளில போம்மா என்று அவரது அம்மாவைச் சொல்ல மீனா அவரது அம்மாவைக் கூட்டிக் கொண்டு வெளியே போகின்றார்.


அப்போது முல்லையிடம் தனம் ரீட்மென்ட் பற்றி டாக்டர் கிட்ட பேசுவமா என்று சொல்ல முல்லை, இப்போ எல்லோரும் வெளில நிற்கிறாங்க இந்த நேரம் போய் டாக்டர் கிட்ட பேசினால் எல்லோருக்கும் சந்தேகம் வந்திடும் என்று சொல்ல தனத்தின் குழந்தை அழ முல்லை தான் பால் கொடுக்கிறேன் என்று சொல்லி குழந்தையை எடுத்துக் கொண்டு போகின்றார்.

தன்னால் தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுக்க முடியல என்று நினைச்சு தனம் அழுகின்றார்.தொடர்ந்து மீனா வந்து தனத்திடம் பேசிட்டு இருக்கின்றார். வீட்டில் இருக்கிற எல்லோரையும் சமாளிக்கபட்ட கஷ்டத்தைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார்.அத்தோடு முல்லையும் வந்து தனத்தை கவலைப் பட வேணாம் என்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.


மறுபுறம் மூர்த்தி வீட்டில் இருந்து தனியாக பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் ஜீவாவும் கதிரும் என்ன ஆச்சு என்று கேட்க மூர்த்தி வீட்டில 4 பொண்ணுங்க வந்தாச்சு ஒரு பொண்ணுக்கு 100 சவரண் நகை என்று பார்த்தாலும் 4 பொண்ணுக்கு 400 சவரன் நகை சேர்க்கனுமே என்று சொல்ல ஜீவாவும் கதிரும் அதிர்ச்சியடைகின்றனர்.

அத்தோடு நகை மட்டும் போதுமா கட்டில் பீரோ அப்பிடி எல்லாத்தையும் இப்பவே சேர்க்க ஆரம்பிச்சிடலாமே என்று நக்கலடிக்கின்றார் ஜீவா. அதற்கு மூர்த்தி இதெல்லாம் இப்ப வாங்க கூடாது நகை மட்டும் தான் எப்பவும் மாறாமல் இருக்கும் என்று சொல்கின்றார். இவ்வாறு எல்லோரும் காமெடியாகப் பேசிட்டு இருக்கின்றனர்.

தொடர்ந்து தனது அத்தாச்சி துாங்கிக் கொண்டிருக்க குழந்தையை வைச்சிருக்கும் முல்லைக்கு, மீனா போன் பண்ணி பேச முல்லை  வீட்டில் அண்ணன் தம்பிகள் பேசிட்டு இருக்கும் விஷயத்தைச் சொல்லி நக்கலடிக்கின்றார். அத்தோடு அக்காவுக்கு எப்படி ரீட்மென்ட் செய்யப்போறமோ தெரில என்று புலம்புகின்றார். இதனை கேட்ட கஸ்துாரி, அக்கா என்றால் தனம் தானே தனத்திற்கு என்ன ரீட்மென்ட் என்று கேட்க முல்லை அது தான்  ரீட்மென்ட் பண்ணி குழந்தை பிறந்தாச்சே என்று சமாளிக்கின்றார்.


மறுநாள் ஹாஸ்பிட்டலில் டாக்டரிடம் முல்லையும் மீனாவும் பேசும் போது டாக்டர் திருச்சிக்கு தான் ரீட்மென்டுக்கு போகனும் என்று சொல்ல இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.தனமும் எப்படிப் போய் ரீட்மென்ட் செய்யப்போறோம் என்று சொல்ல முல்லை அதெல்லாம் பார்த்துக்கலாம் அக்கா என்று சமாளிக்கின்றார்.அத்தோடு தனம் குழந்தையுடன் வீட்டுக்கு வந்ததும் வாசலில் வைத்து எல்லோரும்  ஜாலியாக பேசிட்டு இருக்க அத்தாச்சி ஆரத்தி எடுத்து தனத்தை உள்ளே கூப்பிடுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம். 


Advertisement

Advertisement