• Sep 21 2024

தனம் திருச்சிக்கு போனதை மறந்து பேசும் மூர்த்தி- கண்ணன் எடுத்த திடீர் முடிவு- குழப்பத்தில் இருக்கும் கதிர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வீட்டில் ஐஸ்வர்யா, கண்ணன், கஸ்துாரி ஆகியோர் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்போது கஸ்துாரி ஐஸ்வர்யாவிடம் வீட்டில் எல்லா வேலையும் முடிஞ்சிருச்சா என்று கேட்க ஐஸ்வர்யா,அவங்க போகும் போதே எல்லா வேலையும் செய்திட்டு போய்ட்டாங்க என்று சொல்ல கஸ்துாரி என்னால வேலை எல்லாம் செய்ய முடியாது என் தலைல வேலைய கட்டி விட்டிடாத என்று திட்டுகின்றார்.


பின்னர் கண்ணன், அண்ணியாக்கள் வருவதற்குள் வேலைக்கு போய் ஆகனும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். மறுபுறம் திருச்சிக்கு தனம், முல்லை, மீனா ஆகிய மூவரும் வந்துள்ளனர்.பின்னர் மூவரும் ஹாஸ்பிட்டலுக்கு போய் இருக்கின்றனர். இப்போது தனம் கவலைப்பட மீனா ஆறுதல்ப்படுத்துகின்றார்.

மறுபுறம் வீட்டுக்கு வந்த மூர்த்தி தனம் தனம் என்று கூப்பிட ஐஸ்வர்யா அக்கா தான் இல்லையே மாமா அவங்க தான் திருச்சிக்கு போயிருக்கிறாங்களே என்ற நினைவுபடுத்துகின்றார். அப்போது கண்ணன் கடைல எல்லாம் வியாபாரம் எப்பிடிப் போச்சு என்று எல்லாம் கேட்கின்றார்.

அதற்கு கதிர் நீ என்ன புதுசா கேட்கிற என்று கேட்க அண்ணி இருந்தால் இப்பிடித் தானே கேட்பாங்க அவங்கு குறைய நீக்க தான் நான் கேட்டேன் என்று சொல்கின்றார்.பின்னர் ஹாஸ்பிட்டலில் இருக்கும் தனம் வீட்டுக்கு போன் பண்ணி பேசுகின்றார். மூர்த்தியிடம் பாண்டியனை நல்லாப் பார்த்துக்கோங்க நான் எங்க போனாலும் கவனமாக இருங்க என்று சொல்கின்றார்.


அதே போல கதிர் மற்றும் கண்ணனுக்கும் அட்வைஸ்ட் பண்ணுகின்றார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முல்லை போனை பறித்து கட் பண்ணி விடுகின்றார். பின்னர் வீட்டில இருக்கிறவங்க எல்லாம் பயப்பிடப் போறாங்க அக்கா என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


 

















Advertisement

Advertisement