• Sep 20 2024

குடித்து விட்டு மீனாவின் அப்பாவிடம் தனது வீட்டில் நடப்பதை உளறிய ஜீவா- கடும் கோபத்தில் இருக்கும் மூர்த்தி- மீனா எடுக்கப் போகும் முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் அந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.ஜீவாவும் மீனாவும் தங்கையின் திருமண பத்திரிகை வைப்பதற்காக மீனாவின் வீட்டிற்கு அந்த சின்ன மோட்டர் சைக்கிளில் வருகின்றனர்.

இதனைப் பார்த்த மீனாவின் அம்மா கைக்குழந்தையையும் வைச்சிட்டு வெய்யலுக்குள் இப்பிடியா வருவீங்க. உங்க கார்ல வந்திருக்கலாம் தானே  என்று கேட்கிறார். இதனால் மீனா அந்த காரை கதிரும் மாமாவும் அலுவலாக வெளிய கொண்டு போய்ட்டாங்க என்று சொல்லி சமாளிக்கின்றார். பின்னர் மீனாவுக்கும் கயலுக்கும் மீனாவின் அம்மா சாப்பாடு ஊட்டி விட மீனா மகிழ்ச்சியாக இருக்கின்றார். 


மாமாவுடன் பத்திரிகை வைத்து விட்டு வீட்டுக்கு வந்த ஜீவாவும் இதைப் பார்த்து மீனா வீட்டில் தனி ஆளாக எவ்வளவு கஷ்டப்படுகின்றார் என்பதை நினைத்துப் பார்க்கின்றார். தொடர்ந்து மீனாவும் அவரது அம்மாவும் ஜீவாவைக் கூட்டிக் கொண்டு கல்யாணப் பத்திரிகை வைக்க செல்லும் போது மூர்த்தி அடிக்கடி போன் பண்ணி எப்போ வருவ கடையில யாரும் இல்லை என்று கேட்கின்றார்.

அதற்கு ஜீவா இன்னும் கொஞ்ச இடம் தான் கொடுத்திட்டு வாரேன் என்று சொல்ல மூர்த்தி விடாமல் போன் பண்ணிட்டே இருக்கிறார். இதனால் மீனாவின் அம்மா நீங்க எங்க வீட்டுக்கு வேலையா வந்திருக்கிறீங்க என்று தெரிஞ்சும் இப்படி எடுத்திட்டே இருக்கிறாங்களே எனத் திட்டுகின்றார். பின்னர் ஒரு வழியாக பத்திரிகை கொடுத்து விட்டு மீனாவின் அம்மா வீட்டுக்கு வருகின்றனர்.


பின்பு மீனாவின் தங்கையைத் திருமணம் முடிக்கவுள்ள பிரசாந்த் மற்றும் மீனாவின் அப்பா ஜீவா மூவரும் இருந்து குடிக்கின்றனர். ஜீவா முதலில் குடிக்க மறுத்து விட்டு பின்னர் குடித்து விட்டு வீட்டில்  நடக்கும் விஷயங்களை போட்டு உடைக்கிறார். வீட்டில நாய் மாதிரி இருக்கிறேன். எல்லாத்துக்கும் அண்ணன் கிட்டேயே போய் நிற்கணும் என்று தனது மனதில் இருப்பதை கொட்டி விடுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement