• Sep 21 2024

ஜீவாவால் புலம்பி தவிக்கும் மூர்த்தி...மீண்டும் ஒன்று சேர தனம் போட்ட பிளான்...இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் இனறைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

மூர்த்தி மற்றும் கதிர் குடும்பம் காரில் சென்று கொண்டு இருக்க தனம் மூர்த்தியைப் பார்த்து ஏன் ஜீவாவோடு பேசவில்லை என்று கேட்கின்றார்.ஆனால் மூர்த்தியோ.அவன் என்னைப் பார்த்து முறைத்துப் பார்த்தான்.நான் ஏன் பேசனும் எதுக்கு பேசனும் என காரில் இருந்து கொண்டு புலம்பிக்கொண்டு வருகின்றார்.

அதன் பின் ஜீவா வீட்டிற்கு வந்து ஜோசித்துக் கொண்டு இருக்க மீனா வந்து பிள்ளைளை ஸ்கூல் கூட்டிட்டு போகலாம் எனக் கூறுகின்றார்.இருந்தாலும் ஜீவா ஒரு மாதிரி இப்பதை அறிந்து கொண்ட மீனா ஏன் இப்படி இருக்கிறாய் எனக் கேட்க சமாளித்து கொண்டு இருந்தார்.

இதன் பிறகு மூர்த்தி தன்னை முறைத்து பார்த்ததாகவும் தன்னுடன் பேசாதது பற்றி வருத்தப்பட்டு பேசிட்டு இருக்கின்றார்.இதன் பின்னர் நான் என்ன தப்பு பண்ணின் அவர் ஏன் இப்படி இருக்கிறார்..எனக் கேட்க மீனா சொல்கின்றார்...அவர் உன்னுடைய அண்ணன் தானே நீ பேசி இருக்கலாம் தானே எனக் கூறிதும் நான் தப்பு எதுவும் பண்ணல என சொல்கின்றார்.

இதன் பிறகு முல்லை வீட்டிற்கு அவரின் அம்மா மற்றும் அப்பா வருகின்றனர்.அதன் பின் கோயில் பிரசாதத்தை கொடுத்து முல்லை பற்றி பேசுகின்றார்.முல்லைக்கு வளைகாப்பு வைப்பது பற்றி பேசுகின்றார்.அதாவது முல்லைக்கு 7வது மாசம் வைப்போம் எனக் கூறி இருந்தார்.

அதன் பின் அவர்கள் வெளியில் சென்றதும் கதிர் வருத்தப்பட்டு பேசுகின்றார்.ஒருவரும் இல்லாமல் எப்படி என யோசித்து பேசுகின்றார்.தனம் இது நல்ல சகுணம் தான் இந்த வளைகாப்பில் நம்ம குடும்பம் ஒன்று சேரும் எனக் கூறுகின்றார்.

இவ்வாறு இருக்க குடும்பமாக இருந்து வளைகாப்பு பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர்.இதன் பின் வளைகாப்பு முடிந்த பின் முல்லையை தங்கள் வீட்டிற்கு கூட்டிட்டு போகப்போறோம் என்று கூற கதிர் வேண்டாம் எனக் கூறுகின்றார்.அதுக்கு அவர் எப்படி மாப்பிள்ளை எனக் கேட்க முல்லையும் நானும் வர மாட்டேன் எனக் கூறுகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடவடைகின்றது.  

Advertisement

Advertisement