• Sep 20 2024

தனம் சொன்ன வார்த்தையால் கோபத்தில் நிற்கும் மூர்த்தி- லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட கண்ணன்- சந்தேகத்தில் ஜீவா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லையிடம் ஐஸ்வர்யாவும் கண்ணனும் பொய் சொல்கின்றனர். பின்னர் முல்லை போனதும் நாம பண விஷயத்தில நிறைய பொய் சொல்லிட்டோம் இனிமேல் அந்த தப்பெல்லாம் பண்ணக் கூடாது சரியா நடக்கனும் என்று சொல்கின்றனர்.இதனைத் தொடர்ந்து ஜீவா ரூமில் உட்கார்ந்து இருக்கும் போது மீனாவும் அங்கு வருகின்றார்.


அப்போது ஜீவா நீ எதுக்கு கொஞ்ச நாளாவே அங்க போகனும் என்று சொல்லிட்டே இருக்கிற என்று கேட்ட போது மீனா எல்லோரும் புது வீட்டி சந்தோஷமா இருக்கனும் என்று தானே ஆசைப்பட்டோம். அங்க தானே எல்லோருடைய குழந்தைகளும் இருக்கிறாங்க அங்க நம்ம கயலும் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி சமாளிக்கின்றார்.

தொடர்ந்து விடிந்ததும் மீனாவும் தனம் வீட்டுக்கு வந்து பேசிட்டு இருக்கும் போது மூர்த்தியும் முல்லையின் அப்பாவும் வருகின்றனர்.அப்போது புது வீட்டுக்கு கிரகப்பிரவேஷம் பண்ணுறதுக்கு நாள் எப்போ நல்லா இருக்கு என்று பாருங்க என சொல்ல அப்போது மீனாவின் அப்பாவும் பார்க்கின்றார்.

இன்னும் ஒரு வாரத்தில ஆடி மாசம் தொடங்கிடும் அதுக்கு பிறகு தான் பண்ண முடியும் என்று சொல்ல தனம் ஒரு வாரத்தில நல்ல நாள் இல்லையா என்று பாருங்க என்று சொல்ல இவர் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நல்ல நாள் இருக்கு என்று சொல்கின்றார். தொடர்ந்து ஐஸ்வர்யா அக்கா சொல்லுறதை பார்த்தால் இன்றைக்கே புது வீட்டுக்கு போய்டுவீங்க போல இருக்கு என்று சொல்ல தனம் நாளைக்கு என்ன நடக்குமோ தெரில என்று சொல்ல மூர்த்தி கோபப்பட மீனா சமாளிக்கின்றார்.


தொடர்ந்து பாங்கில் கண்ணன் லஞ்சம் வாங்கும் விசயம் அவரது மேனேஜருக்கு தெரிந்ததால் அவர் கண்ணனை அழைத்து திட்டுகின்றார். பின்னர் கண்ணன் வெளியெ வந்ததும் லான் வாங்க ஒருவர் வந்து லஞ்சம் கொடுக்கின்றார். அதை வாங்கலாமா வேண்டாமா எனக் கண்ணன் ஜோசிக்கிறார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement