• Sep 20 2024

ஹொட்டல் பணத்தை கதிரிடமே கொடுத்த மூர்த்தி- கண்ணன் எடுத்த முடிவு- மாமனார் குடும்பத்துடன் சிரித்து பேசும் ஜீவா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சொத்தை பிரித்துக் கேட்டதாக சொன்னதாக கஸ்துாரி ஐஸ்வர்யாவிடம் வந்து சொல்கின்றார். இதனால் கோபமடைந்த கண்ணன் யார் கிட்ட போய் இதெல்லாம் கேட்டீங்க, இனிமேல் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்காதீங்க என்று சொல்லி விட்டு செல்கின்றார். பின்னர் இது குறித்து பேச கதிர் கண்ணன் வீட்டுக்கு வந்து என்ன ஏது என்று கேட்கிறார்.


அதற்கு கண்ணன் யா் என்ன சொன்னாலும் நம்பிருவீங்களா அண்ணா எனக்கு சொத்து வேணாம் என்கிறார். ஆனாலும் ஐஸ்வர்யா சொத்தில பங்கு இருக்கு தான் ஆனால் இப்போதைக்கு வேணாம். தனியாக இருப்பது தான் எங்களுக்கு நிம்மதி என்று சொல்கின்றார். தொடர்ந்து இனிமேல் வீடு கட்டினாலும் நாம ஒன்றாக ஒரு வீட்டில இருக்கப் போவது கிடையாது என்றும் சொல்லி கதிருக்கு அதிர்ச்சி கொடுகின்றனர்.


இதேன் பின்னர் ஜீவா மீனா இருவரும் தமது பெற்றோருடன் இருநத கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கயல்பாப்பாவை வைத்து சிரித்து சிரித்து பேசி மகிழ்கின்றனர். தொடர்ந்து வீட்டுக்கு வரும் மூர்த்தி ஹொட்டலில் இருந்து கிடைத்த பணத்தை கதிர் கிட்டையே கொடுக்கின்றார். பணத்தாலதானே இவ்வளவு பிரச்சினையும் எனச் சொல்ல கதிர் மூர்த்தியிடம் ஜீவாவும் கண்ணனும் செய்த மாதிரி நான் செய்ய மாட்டேன் என்று கூறி அந்த இடத்தை விட்டு செல்கின்றார். முல்லையும் மூர்த்தியிடம் அவரை கஸ்டப்படுத்தாதீஙக என்று சொல்ல மூர்த்தி கவலையடைகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement