• Sep 20 2024

தனத்திற்கு சிசேரியன் செய்ய மறுப்புத் தெரிவித்த மூர்த்தி- கதிகலங்கிப் போய் இருக்கும் முல்லை மற்றும் மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது தனத்திற்கு புற்றுநோய் இருப்பதால் யாருக்கும் தெரியாமல் ஆப்பரேஷன் செய்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முல்லையும் மீனாவும் இருக்கின்றனர்.

மேலும் தனத்திற்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தால் மூர்த்தி என்ன செய்வார்.தனம் புற்று நோயிலிருந்து மீள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தனத்திற்கு பிரசவ வலி வந்து விட்டதாக முல்லையும் மீனாவும் ஒரு வழியாக ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று விட்டனர். அங்கே ஜீவாவையும் கதிரையும் மீனாவும் முல்லையும் சிசேரியன் செய்ய சம்மதிக்க வைத்து விட்டனர்.

ஆனால் மூர்த்தி தனத்திற்கு ஆப்பரேஷன் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. இதனால் எப்படி தனத்தை காப்பாற்றப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement