விஜய்டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியலான பாக்கியலட்சுமியில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் மெகா சங்கமம் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
ராதிகா வீட்டிற்குச் சென்ற மூர்த்தியும் தனமும் நீங்க கட்டிக்கப்போற அவருடைய போட்டோ இருக்கா என கேட்க அவர் கோபியின் போட்டோவை எடுத்து காண்பிக்க அதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா எனக் கேட்க கல்யாணம் ஆகிடுச்சு அவரும் டிவோர்ஸ் பண்ணபோறாரு, அடுத்த மாசம் கிடைத்துவிடும் அதுக்கப்புறம் சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என சொல்கிறார்.
இதைக் கேட்டு வீட்டுக்கு வந்த இருவரும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்க தனத்திடம் வந்து பாக்கியா கோபியில் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருக்கு இப்போ எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவருக்கு வேற யாரோட தொடர்பு இருக்குனு நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல என கூறுகிறார். செல்வி தான் அவரை ஏதோ பொம்பளையோட பார்த்ததா அடிக்கடி சொல்லிட்டே இருக்கா என கூறுகிறார். கோர்ட்டுக்கு கூட்டிக் கொண்டு தன்னிடம் கையெழுத்து வாங்கிய விஷயத்தைச் சொல்கிறார் அங்கே எல்லோரும் விவாகரத்து கேட்டு தான் வந்து இருந்தாங்க என கூறுகிறார்.
பிறகு தனம் பாக்கியா அண்ணிக்கு தெரியாம கோபி டிவேர்ஸ் வாங்க முயற்சி பண்ணி இருக்காரு என சொல்ல இதைக் கேட்டு மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னர் எல்லோரும் ஊருக்கு கிளம்பி தயாராக இருக்க அப்போது கோபி கீழே இறங்கி வந்து எல்லோரும் கிளம்பிட்டீங்களா பார்த்து போய்ட்டு வாங்க என சொல்ல அந்த நேரத்தில் மூர்த்தி உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.
ரூமுக்குள் சென்றதும் மூர்த்தி கோபியை சரமாரியாக கேள்வி கேட்கிறார் ராதிகா எல்லா விசயத்தையும் சொல்லிடாங்க உங்களுக்கு எப்படி பாக்யாவுக்கு துரோகம் பண்ண மனசு வருது என கேட்கிறார். இதல்லாம் கேட்க நீ யாரு உனக்கு யாரு அதிகாரத்தைக் கொடுத்தது என கோபி கேட்க தப்பு பண்ணினால் யார் வேணாலும் தட்டிக் கேட்கலாம் என சொல்கிறார்.
அதன் பின்னர் ராதிகா எல்லா விசயத்தையும் சொல்லிடாங்க அவங்ககிட்ட நாங்க எல்லா உண்மையையும் சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க என கூறுகிறார். பாக்கியா அக்காவை ஏமாத்தி டிவோர்ஸ் வாங்க பார்த்து இருக்கீங்க இது எல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் சொன்னா இந்த குடும்பம் என்னாகும்னு நெனச்சு பார்த்தீங்களா என கேட்க போய் சொல்லுங்க அப்பவாவது இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என கூறுகிறார்.
ராதிகா கிட்ட பாக்கியா தான் என் பொண்டாட்டி என்று உங்களால உண்மைய சொல்ல முடியுமா அசிங்கமா இல்லை என மூர்த்தி சொல்ல உனக்கு அவ்வளவு தான் மரியாதை என கோபி சத்தம் போடுகிறார். பாக்கியாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும் நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத என கூறுகிறார். இவர்களின் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்து கதவைத் தட்ட கதவை திறந்து உண்மையை சொல்லட்டுமா என மூர்த்தி கேட்க சொல்லுங்க என கோபி கூறுகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் என்ன பிரச்சனை என ஈஸ்வரி கேட்க அதை நான் சொல்றேன் அத்தை என மூர்த்தி பேசத் தொடங்குகிறார். அதன் பிறகு தனம் மற்றும் மூர்த்தி இருவரும் ராதிகா வீட்டிற்குச் சென்று நீங்க நினைச்சுட்டு இருக்க மாதிரி கோபி நல்லவர் கிடையாது என கூறுகிறார்.
பிற செய்திகள்:
- சிம்புவின் பத்து தல திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்
- ஆஸ்கார் விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்
- கடுமையான ஒர்க் அவுட் செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
- தனுஷ் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்- மதுரை தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!