• Sep 20 2024

திருச்சிக்கு கிளம்பிய முல்லைக்கு மூர்த்தி சொன்ன அதிர்ச்சித் தகவல்- என்னசெய்வதென்று தெரியாமல் தவிக்கும் மீனா மற்றும் தனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தி தனத்திடம் சென்று இந்த ஐஸ்வர்யா புள்ள திருந்தவேமாட்டா போல இருக்கே, குழந்தைகளை வைச்சு வீடியோ எடுத்திட்டு இருக்கிறா எத்தினை தடவை சொன்னாலும் இது தப்பை பண்ணிட்டு இருக்கு அந்தப் புள்ள என்று சொல்ல அந்த நேரம் கண்ணன் வந்து என்னாச்சு என்று கேட்க முல்லை, ஐஸ்வர்யா குழந்தைக வீடியோ எடுக்கப்போன விஷயத்தைச் சொல்ல கண்ணன் நான் அவகிட்ட பேசிக்கிறேன் என்று சொல்கின்றார்.

தொடர்ந்து வெளியே வரும் கண்ணன் ஐஸ்வர்யாவின் குரல் கேட்பதை அறிந்து ஐஸ்வர்யாவைப் போய் பார்க்க அவர் வீடியோ எடுத்திட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். உடனே ஐஸ்வர்யாவிடம் வீடியோ எடுப்பதை நிறுத்து என்று சொல்ல ஐஸ்வர்யா சொல்லுவதைக் கேட்காமல் வீடியோ எடுக்க கண்ணன் போனை பிடுங்கி வைத்து விடுகின்றார்.


அப்போது கஸ்துாரி வர கண்ணன் இந்த விஷயத்தைச் சொல்ல கஸ்துாரி இப்போ இந்த விஷயத்தை என்கிட்ட எதுக்குச் சொல்லுறீங்க. அதான் இவளைக் கல்யாணம் பண்ணாத என்று சொல்ல சொல்ல கட்டினாய் தானே இப்போ அனுபவி என்று சொல்லி விட்டு செல்கின்றார். மறுபுறம் மீனா ஜீவாவிடம் என்னை கொண்டு போய் வீட்டில விடுறியா என்று கேட்க ஜீவாவும் ஓகே சொல்கின்றார்.

பின்னர் மீனா தன்னுடைய பெற்றோரிடம் வந்து நான் எங்க வீட்டை போய்ட்டு வாரேன் என்று சொல்ல, மீனாவின் அம்மா இது யாருடைய வீடு என்று கேட்கின்றார். அங்க தான் எல்லாரும் இருக்கிறாங்களே சாயங்காலமாக போ என்று சொல்ல மீனா அடம்பிடித்து ஜீவாவைக் கூட்டிக் கொண்டு அங்கே போகின்றார்.

பின்னர் எல்லோரும் இருந்து பேசிட்டு இருக்கும் போது  கதிர் முல்லை கவர்மென்ட் வேலைக்கு போறதுக்காக திருச்சிக்கு எக்ஸ்சாம் எழுதப் போகனும் என்று சொல்ல மூர்த்தி நல்ல விஷயம் தானே கதிர் கூட்டிட்டு போய்ட்டு வரட்டும் என்று சொல்கின்றார்.அப்போது மீனா அவரு எப்படி குழந்தையை பார்த்துப்பாரு நான் போய்ட்டு வாரேன் என்று சொல்ல மூர்த்தி அப்போ நீங்க மூன்று பேரும் போங்க என்று சொல்ல முல்லை, எங்க ரெண்டு பேரோடையும் மீனா வந்த அவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும்ல என்று சொல்ல அப்போ ஜீவாவையும் கூட்டிட்டுபோங்க என்று சொல்கின்றார்.


அப்போது தனம் அதெல்லாம் வேணாம் நான் மீனா, முல்லை மூன்று பேரும் போய்ட்டு வாறோம் என்று சொல்ல மூர்த்தி அதெப்படி மூன்று பேரையும் தனியாக விடுறது உங்க கூட கதிரும் வரட்டும் துணைக்கு என்று சொல்கின்றார்.இதனால் மீனா முல்லை தனம் மூன்று பேரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement