தற்போது தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் தமன்.
தன்னுடைய 5 வயதிலேயே தந்தையை இழந்த தமன் சிறுவயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட தமனுக்கு பக்க பலமாக இருந்தது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான். எஸ்.பி.பியின் ட்ரூப்பில் டிரம்மராக வாசித்து வந்தவர்.
அத்தோடு இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அதன்பின்னரே ஒரு இசையமைப்பாளராக களமிறங்கி இருக்கிறார்.
சில படங்களில் பாடல்கள் பாடி ஒரு பாடகராகவும் வலம் வருகிறார்.அண்மையில் இவர் விஜய்யின் வாரிசு பட பாடல்களுக்கு இசையமைத்து தமிழ் மக்களின் மனதை கவர்ந்துவிட்டார்.
இவ்வாறுஇருக்கையில் இசையமைப்பாளர் தமன் ஸ்ரீ வர்தினி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அஷ்யுத் என்ற மகன் இருக்கிறார்.
தற்போது இசையமைப்பாளர் தமனின் மனைவியும், பாடகியுமான ஸ்ரீவர்தினி நீயா நானா எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
இதோ அந்த புகைப்படங்கள்...
Listen News!