தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரைக்கும் அவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவில் பேர் போனவை சீரியல்கள். இந்த சீரியல்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகுவிரைவாக வைரலாகின்றனவோ அதே போல் அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் கூடிய சீக்கிரமே பரீட்சயமான முகமாக மாறி விடுகின்றனர்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த சீரியல்களில் ஒன்று 'வேலைக்காரன்' சீரியல். ஏனைய சீரியல்களை விட இந்த சீரியல் குறித்து கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதாவது 'முத்து' படத்தின் சீரியல் வெர்ஷன் என ஆரம்பத்தில் இந்த சீரியல் பலராலும் கலாய்க்கப்பட்டிருந்தது.
இந்த சீரியலில் வேலன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சபரியும், வள்ளி என்ற கதாபாத்திரத்தில் கோமதி ப்ரியாவும், விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் மலையாள சினிமா நடிகையான சோனா நாயரும், ராகவன் என்ற கதாபாத்திரத்தில் சத்யாவும் நடித்தனர். ஆரம்பத்தில் இந்த சீரியலின் உடைய கதை மெதுவாக சென்று கொண்டிருந்தது.
ஆனால் சிறிது காலத்தின் பின்பு கதையானது பயங்கர விறுவிறுப்பாக சென்றது. இதற்கு முக்கியமான காரணம் இந்த சீரியலின் வில்லி தான். அதாவது இதில் வில்லி கனகா ரோலில் சீரியல் நடிகை திவ்யா மிரட்டி இருந்தார். இவரின் அட்டகாசமான நடிப்பு ரசிகர்களை பெருமளவில் ஈர்த்து இருந்தது. மேலும் 'சமையல் மந்திரம்' என்ற நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளினியாக அறிமுகமான திவ்யா இப்போது அதனையும் தாண்டி பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறாக சீரியல்களில் பிஸியாக இருந்து வரும் திவ்யாவிற்கு அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அதாவது விதவிதமான கான்செப்ட்களுடன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கப்படும் பல காட்சிகளை தன்னுடைய இன்ஸ்டாவில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகை திவ்யா 'தினம் ஒரு திருக்குறள்' என்ற தலைப்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகின்றார்.
இவர் குழந்தைங்களுக்கு ஈஸியான வழியில் திருக்குறள் சென்றடையணும் என்கிற நோக்கில் இதனை தவறாமல் செய்து வருவதாக கூறியிருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு, சிறந்த பாராட்டுக்களும் இவருக்கு கிடைத்துள்ளது. அதை பார்த்து விட்டு மறைந்த நடிகர் விவேக் கூடி ஒருமுறை திவ்யாவை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி இருக்கிறார்.
இந்தநிலையில் திவ்யாவுக்கு மற்றொரு ஆச்சரியத்தை தந்து இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். அதாவது இவர் திவ்யாவின் இன்ஸ்டா பக்கத்தை தற்போது ஃபாலோ செய்து வருகிறார். இதைப் பார்த்த நடிகை திவ்யா, இது தனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை என்றும், ஆச்சரியமாக உள்ளதென்றும் நன்றியுடன் தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றினை பகிர்ந்து இருக்கிறார்.
இவ்வாறாக திவ்யா தான் ஒரு நடிகை என்பதை எல்லாம் தாண்டி அவர் தமிழ் மற்றும் திருக்குறள் மீது கொண்டிருக்கும் ஆர்வம் தான் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்து இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். எனினும் திவ்யா தனக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருப்பதாக இப்போதும் கூறி வருகின்றார்.
பிற செய்திகள்
- சூப்பர் ஸ்டாரின் கையில் இருக்கும் அந்தக் குழந்தை யாரு..? இப்போது என்ன பண்ணுகிறார்?.. வைரலாகும் தகவல்..!
- 6 பெண்களை காதலித்து ஏமாற்றும் பிரபுதேவா…இது என்ன புது டுவிஸ்டா இருக்கே…!
- “இதனால் தான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன்”…ரகுவரனின் குடும்பம் பற்றிப் பேசிய நடிகை ரோஹிணி
- பட வாய்ப்பிற்காக பச்சை உடையில் பளிச்சென மின்னும் மாளவிகா மோகனன்…கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாப்பா..?
- பரத்தின் பிறந்தநாளில் சர்ப்பிரைஸாக படக்குழுவினர் செய்த விஷயம்…என்ன தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!