• Sep 20 2024

பூமியின் முடிவையறிந்து கதறி அழும் முத்தழகு... வாக்குக் கொடுத்த பூமியின் தாயார்... விறுவிறுப்பான 'Muthazhagu' Serial Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக  ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியலை ரொம்பவும் பரபரப்பான கட்டத்தில் பூமி , முத்தழகையா? அல்லது அஞ்சலியையா..? யாரை திருமணம் செய்ய போறாருனு ஒரு டுவிஸ்ட்வோடையே  வச்சி இருந்தாங்க.


இந்நிலையில் இன்றைய தினம் ரிலீஸ் ஆனா ப்ரோமோவில் பார்க்கும் போது பூமிகிட்ட பேசுறதுக்கு முத்தழகு ரூம்க்கு வந்து உங்ககிட்ட பேசணும்னு சொல்லுறாங்க , யாரென பூமி முத்தழகு முகத்த கூட பாக்காம '' என்ன பேசணும்னும் இனி பேசுறதுக்கு ஒன்னும் இல்ல நாளைக்கு என்ன  முடிவு  எடுக்க போறேனு  ரூம பாத்து தெரிஞ்சிக்கோங்க நாளைக்கு என்னோட முடிவு அதுவாத்தான் இருக்கும், என் மனசில நீங்க எந்தளவிற்கு இருக்கீங்க தெரியுமா'' என்கிறார்.


அப்போது ரூமில் முத்தழகு பூமியோட சேர்ந்து இருக்குற படம்  கீழ  கிடக்கிறத பாத்துட்டு முத்தழகு அழுதுட்டு போறாங்க.


பின்னர் "ஏன் மகன் உன்ன தேர்ந்தெடுக்கமா போனாலும் என் வாக்குக்கு கட்டுப்பட்டு இங்கையே இருக்கணும்' என்று பூமியின் அம்மா முத்தழகிடம் சத்தியம் வாங்குகின்றார்.


இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பூமி  முத்தழகைக் கல்யாணம் செய்யாமல் அஞ்சலி கழுத்துல தாலி கட்டிருவாரு போலதான் இருக்கு. இதனைத் தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement