• Sep 20 2024

நான் இழுக்கவில்லை என்றால் மகளின் கால் துண்டாகியிருக்கும்- செப் வெங்கடேஷ் பட் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் செஃப் வெங்கடேஷ் பட்.இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

மேலும் இவர் சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். அது மட்டுமின்றி கிட்சன் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


இந்நிலையில் வெங்கடேஷ் பட் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல மாலுக்கு மகளுடன் சென்றபோது நடந்த அதிர்ச்சிச் சம்பவத்தை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு நானும் என் மகளும் வந்திருந்தோம். அப்போது, எஸ்கலேட்டரில் எனது மகளின் கால் சிக்கிக் கொண்டது. நான் அவளின் கையை பிடித்து இழுத்ததால் அவளின் கால் தப்பித்தது. நல்லவேலையாக இழுத்து என் மகளை காப்பாற்றினேன்.


நான் மட்டும் என் மகளை இழுக்கவில்லை என்றால், என் மகளின் கால் துண்டாகி இருக்கும். இதுகுறித்து பீனிக்ஸ் மாலின் நிர்வாகத்திற்கு புகார் கொடுத்திருக்கிறேன். குழந்தைகளோடு வரும் அனைவரும் கவனமாக இருங்கள் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி அனைவரும் உங்கள் மகளுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர்.

இதையடுத்து, சற்று முன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட வெங்கடேஷ் பட், நான் வெளியிட்ட செய்தியைப் பார்த்து பலரும், என் மகள் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்கள். அவர் நன்றாக இருக்கிறார். அந்த வீடியோவை வெளியிட முக்கியமான நோக்கமே மற்ற யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான், இதுகுறித்து பீனிக்ஸ் மாலின் நிர்வாகம் என்னை தொடர்பு கொண்டு, அடுத்து எடுத்திருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பேசினார்கள் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement