• Sep 20 2024

இயக்குநராக வரவேண்டும் என்பது தான் என்னோட ஆசை- அப்போ எப்படி சிவகார்த்திகேயன் நடிகர் ஆனார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமானவர்கள் திரைப்படங்களில் ஜொலிக்க முடியுமா? என்கிற கேள்வி பல வருடங்களாகவே இருந்து கொண்டிருந்த நிலையில், அதிரடியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்து ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

 விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றதோடு, சிவகார்த்திகேயனுக்கு அறிமுகப்படமாகவும் அமைந்தது.


இதனைத் தொடர்ந்து பல திரை்படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவரது நடிப்பில் வெளியாகிய டாக்டர் டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் இவரது படங்கள் மீதன எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


இவர் தற்பொழுது மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இந்த நிலையில் ஓர் இன்டர் வியூவில் கலந்து  கொண்ட போது எனக்கு இயக்குநர் ஆகனும் என்பது தான் ஆசை. காலேஜில் படிக்கும் போதெல்லாம் இயக்குநர் ஆவது ஈசி என்று நினைச்சிட்டேன். ஆனால் சினிமாவிற்குள் வந்ததுக்கப்பிறம் தான் அது எவ்வளவு கஷ்டம் என்று தெரிஞ்சுக்கிட்டேன்.ஆடியன்ஸிற்கு தெரியிற மாதிரி எழுத தெரியணும் அதெல்லாம் எவ்வளவு கஷ்டம் என்று நல்லாவே தெரிஞ்சு கொண்டேன் என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement