இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.பான் இந்தியத்திரைப்படமா உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாவதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்கும் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
நீலாங்கரையில் நேற்று நடந்த விழாவில் விஜய் பயங்கர க்யூட்டாக கலந்துகொண்டார். மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். யாரிடமும் முகம் சுளிக்காமல் அவர்களது சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றி தன்னை ஒரு பக்குவப்பட்ட மனிதராக காண்பித்துக்கொண்டார் என ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர். மேலும் 13 நேரத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேரம்வரை விஜய் நின்றுகொண்டே சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அசுரன் பட வசனத்தை பேசிவிட்டு பேச்சை தொடங்கிய விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். பணம் வாங்காமல் வாக்கு செலுத்த உங்கள் தந்தை, தாயிடம் சொல்லும்படி கூறினார். அவரது பேச்சு பலரிடம் பாராட்டை பெற்றாலும் சிலர் அதை விமர்சிக்கவும் செய்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட விஜய் எல்லோருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!