மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் மாமன்னன்.இப்படத்தின் ப்ரமோஷனுக்காக உதயநிதி பல்வேறு சேனல்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அப்பொழுது தான் மகன் பற்றியும் ஓபனாக பேசி அனைவரையும் வியக்க வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.அந்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, அப்பா எனக்கு நண்பர் போன்றவர். அப்பா, அம்மா இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும்போது, அப்பா நான் உங்களிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்று சொன்னால் எல்லாம் முடிஞ்சுச்சு.
அதனால் அப்பா தனியாக இருந்தபோது அவரிடம் என் காதலை சொன்னேன். அவரோ, அம்மாவிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். அதனால் எந்த பிரச்சனையும் வரவில்லை என்றார்.நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். கிருத்திகா 12ம் வகுப்பு படித்தார். அப்பொழுது தான் எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. 7, 8 ஆண்டுகள் காதலித்தோம். அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் காதல் திருமணம் செய்யாவிட்டால் ஒரு மாதிரி பார்த்தாங்க. பல காதல் திருமணம் நடந்தது. காதலிக்கவில்லை என்றால் ஏன் என்று கேட்பாங்க என உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
எங்கள் வீட்டில் காதல் திருமணம் எல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. என் பையன் இப்போ என்னைவிட பெரிய லூட்டிலாம் அடிச்சிட்டு இருக்கான். இருந்தாலும் பார்த்து, உன் வயசுக்கு தகுந்த மாதிரி பண்ணுப்பா என அறிவுரை வழங்கினேன் என்றார் உதயநிதி. இதனால் இன்பநஜதி கொடுத்து வைத்தவர் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!