• Sep 21 2024

இளம் நடிகை மர்ம மரணம்: பரபரப்பு தகவலை வெளியிட்ட அவரது அம்மா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கேளராவின் காசர்கோடு என்னும் பகுதியைச் சேர்ந்த பிரபல நடிகையான சஹானா மலையாளம் மற்றும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். 21 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முதல் இரவு ஜன்னல் கிரில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸார் நடிகையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவரது மரணம் குறித்து அவரது அம்மா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சஹானாவின் அம்மா தெரிவித்திருப்பதாவது…

சஜத்துக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. தினமும் குடித்துவிட்டு வந்து என் மகளை கொடுமைப்படுத்துவார். மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்தார். சஹானாவின் நகைகளை எல்லாம் சஜத் விற்றுவிட்டார். சஹானா தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

நடிகையும், மாடலுமான சஹானாவுக்கு சஜத் என்பவருடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனினும் இந்நிலையில் மே 12ம் தேதி தனது 22வது பிறந்தநாள் அன்று சஹானா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இது கொலை என்கிறார் சஹானாவின் அம்மா உமைபன்.

மேலும் சஹானாவின் அம்மா உமைபன் மேலும் கூறியதாவது, என் மகளின் மரணத்திற்கு சஜத் தான் காரணம். சஜத், அவரின் சகோதரி மற்றும் பெற்றோர் என் மகளை கொடுமைப்படுத்தி வந்தார்கள். மாடலிங் செய்தது தொடர்பாக சஹானாவுக்கு கிடைத்த செக்கை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டு சஜத் அவரை அண்மையில் அடித்திருக்கிறார் என்றார்.

பாத்ரூமில் சஹானா பிணமாகக் கிடந்ததாக போலீசாரிடம் சஜத் குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு சஜதை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சஜத், சஹானா இடையே தொடர்ந்து சண்டையாக இருந்தது. அதனால் அவரின் மரணம் பற்றி சஹானாவின் அம்மா சொல்வது தான் சரி என்று அக்கம்பக்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

https://www.youtube.com/embed/wvRxMVKsd6o

Advertisement

Advertisement