• Sep 20 2024

ராஜ்கிரனின் மனைவி தனிமையில் இருந்த போது வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள்; திரையுலகில் பரபரப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தனது கம்பீரமான தோற்றத்தினாலும் இயல்பான நடிப்பினாலும் நடித்து வரும் நடிகர் தான் ராஜ்கிரண். இவர் இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ராஜ்கிரண் வீட்டுக்கு சென்ற சிலர் ராஜ்கிரணின் மனைவி கதீஜாவிடம் அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும், ராஜ்கிரணைப் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர்கள் யார் என்று கேட்டபோது மாற்றி மாற்றி பதில் சொல்லியுள்ளார்கள்.


பின்னர் அங்கு “நீங்கள் ஒரு இந்து விரோதி என்றும் முஸ்லீம் விரோதி” என்றும் கோஷமிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். சம்பவம் நடந்த போது ராஜ்கிரண் வீட்டில் இல்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து ராஜ்கிரணின் மனைவி கதீஜா காவல்நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்துள்ளனர்.இந்த சம்பவம் திரையுலகினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.





Advertisement

Advertisement