• Sep 21 2024

மீனா கணவர் மரணத்தில் மர்மம்- வாயிக்கு வந்தவாறு பேசிய பயில்வானுக்கு எதிராக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காந்தக் கண்ணழகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் தனது இயல்பான நடிப்பினாலும் கவர்ச்சி மிகுந்த அழகினாலும் ரசிகர்களைக் கவர்ந்த இவர் தற்பொழுது முக்கிய கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் பிரபல தொழிலதிபரும் இவருடைய கணவனுமான வித்யாசாகர் நுரையீரல் பிரச்சினை காரணமாக சில நாட்களுக்கு முதல் இறப்புக்குள்ளானார்.

இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்ததோடு ரஜினி ,குஷ்பு ,ரம்பா ,பிரசன்னா, மன்சூர் அலிகான், சரத்குமார் எனப் பல பிரபலங்கள் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

மேலும் இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஏன் மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை என வாயிக்கு வந்ததை பேசி யூடியூபில் வெளியிட்டார் பயில்வான் ரங்கநாதன். இவரது பேச்சுக்கு திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருவது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் கமிஷனர் அலுவலகத்தில் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து புகார் கொடுத்திருந்தார்.

ராஜனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருவதோடு பயில்வானுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் எனக் கூறி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

  1. காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா
  2. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement