• Sep 21 2024

வாணி ஜெயராம் மரணத்தில் மர்மம்.. காலையில் நடந்தது என்ன..? பணிப்பெண் கூறிய அதிர்ச்சித் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

10 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களை பாடி இந்திய இசையுலகையே தனது குரலினால் ஆட்சி செய்து வந்தவர் பாடகி வாணி ஜெயராம். அதாவது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கின்றார். 


இந்நிலையில் இவர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த மரணம் குறித்து போலீசார் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஆனால் இதனிடையே வாணி ஜெயராம் வீட்டில் பணி புரிந்த பணிப்பெண் மலர்கொடி என்பவர் செய்தியாளர்களிடம், இன்று காலை என்ன நடந்தது என்ற தகவலை ஓப்பனாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் "வாணி ஜெயராம் அவரது வீட்டில் தனியாகத் தான் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டில் எல்லா வேலையும் நான் தான் செய்வேன். 

வழக்கம்போல இன்றைக்கு காலை 10.45 மணிக்கு நான் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடித்தேன். கிட்டதட்ட 5 முறை அடித்தும் வாணி ஜெயராம் கதவைத் திறக்கவில்லை. உடனே அவருக்கு போன் செய்து பார்த்தேன். அழைப்பை எடுக்கவில்லை. என் கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவரும் வாணி ஜெயராமிற்கு போன் செய்து பார்த்தபோதும் அந்த அழைப்பை எடுக்கவில்லை, கதவும் திறக்கப்படவில்லை.


 இதனால் சந்தேகமடைந்து கீழ் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்தை சொன்னேன். பின்னர் நாங்கள் அனைவரும் சேர்ந்து போலீசுக்கு தகவல் சொன்னோம். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்த வண்ணமே இருந்தது. அவர் எந்த சிகிச்சையும் எடுத்து வரவில்லை. தற்போது நெற்றியில் காயம் இருக்கிறது" என மலர்கொடி பகீர் கிளப்பும் வகையில் தெரிவித்துள்ளார்.

இதனால் வாணி ஜெயராமின் மரணம் மர்மமானதாக இருக்கலாம் எனக் கருதி போலீசார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement