சமீபகாலமாக விஜய் டிவியில் படத்தின் தலைப்புகளை மையமாக வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. படத்தின் தலைப்பை வைத்து ‘கடைக்குட்டி ,சிங்கம் ஈரமான ரோஜா’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல்வேறு சீரியல்கள் வந்தன. அதேபோல் ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என பல சீரியல்கள் இரண்டு பாகங்களாக வெளிவந்தன.
தஅந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பப்பட்டது. முதல் சீசனைப் போலவே, இரண்டாவது சீசனும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த தொடரில் வந்த தீபா, ஏற்கனவே ஒரு துணை நடிகையாக பணியாற்றினார்,போக போக படிப்படியாக தொடர்களில் முன்னணி பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து தனியாக வசித்து வந்தார். தீபாவுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் இரண்டாம் திருமணம் நடந்தது. இது தொடர்பான புகைப்படத்தை தீபா தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்,
தீபாவின் மறுமணம் குறித்து ஏற்கனவே பல்வேறு தேவையற்ற வதந்திகள் பரவி வந்தன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் காத்திருந்த தீபா, அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இந்த புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
Listen News!