மதுரையை பூர்வீகமாகக் உயரம் குறைவான நடிகர் தான் மோகன்.இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலுக்கு நண்பர்களாக வரும் உயரம் குறைவானவர்களில் ஒருவராக நடித்து ரசிகர்களிடம் பிரபல்யமானார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இன்னும் சில படங்களில் நடித்தார்.
குறிப்பாக இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து படவாய்ப்புக்கள் கிடைக்காததல் மோகன் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்று விட்டார்.
மதுரைக்கு சென்ற இவர் வறுமை காரணமாக திருப்பரங்குன்றத்தில்கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு காலத்தை தள்ளி வந்தார்.ஒருகட்டத்தில் அவர் யாசகம் பெறும் நிலையும் உருவாகியிருந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று சாலையோரத்தில் இறந்து கிடந்திருக்கின்றார்மோகன்.
அவரது உடலை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மோகனின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிந்த கையோடு மோகனின் உடல் அவரது சொந்த ஊரான மேட்டூருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சினிமாவில் அடையாளப்பட்டு அடையாளமே இல்லாமல் மோகன் இறந்து கிடந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!