விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.
அந்தவகையில் கோபியின் நடிப்பிற்கு வேறு யாரும் இணையில்லை என்று கூறுமளவிற்கு பல ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார். இதற்கு முன்னர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் சேர்த்தது 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவர் நடித்த கோபி கதாபாத்திரம் தான்.
சதீஷ் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது அவர் நடராஜர் சிலைக்கு அருகில் நின்று எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒரு சிறு கருத்தினையும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதாவது "ஆடல் அரசே, ஆனந்தக் கூத்தாடியே. ஏது வருகை. ஏது செல்வது.வந்தது முக்கியமா போவது முக்கியாமா. இல்லை நடுவில் சிக்கி கொண்டு வாழ்வது முக்கியமா. எந்தப் பயனும் இல்லாமல் வாழ்வதும் ஒருவித இறப்பே, துன்பத்திலும் வாழ முயற்சிப்பதும் ஒரு வித மறுபிறப்பே, நான் சொல்லுறது கேக்குதா..? புரியுதா கண்ணுங்களே, நான் சதீஷ், கோபி இல்லை" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
Listen News!