விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
அதில் நடேசன் மாப்பிள்ளையை தமிழ் கத்தியால் குத்தின என்று சொன்ன வீடியோ இதில இருக்குமே என்று சொல்லி லாப்டாப்பில் எதையோ தேடுகின்றார். அதனை மறைந்து நின்று பார்த்த அர்ஜுன் "ஏதோ சிசிடிவி வீடியோ வாங்கிட்டார் போல இருக்கே, இதை மட்டும் அவர் பார்த்திட்டால் இன்றுடன் நமது கதை முடிந்து விடுமே" என மனதிற்குள் எண்ணுகின்றார்.
பின்னர் ராகினி வாக்கிங் போகணும் என்று கேட்கின்றார். அதற்கு அர்ஜுன், மாமா இருக்கார் தானே அவரைக் கூட்டிற்று போ எனக் கூறுகின்றார். நடேசனும் ராகினியை அழைத்து செல்கின்றார். நடேசன் போனதும் அர்ஜுன் லாப்டாப்பை எடுத்து அந்த வீடியோவை அழித்து விடுகின்றார். அந்த சமயத்தில் அவரின் பட்டன் கீழே அறுந்து விழுந்து விடுகின்றது.
மறுபுறம் ராகினி உடையில் இருந்த பட்டனை காணவில்லை எனக் கூற, அர்ஜுன் அது எப்படி அறுந்த என்று தனக்குத் தெரியாது என்கிறார். அந்த சமயத்தில் அங்கு வந்த நடேசன் அந்த பட்டினைக் கொடுத்து இதுவா என்று பார்க்குமாறு கூறுகின்றார். இதனைத் தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்பதை எபிசோட்டின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!