சினிமாவைப் பொறுத்தவரையில் ரீல் ஜோடியாக இணைந்து நடித்தவர்கள் ரீல் ஜோடியாக மாறிய வரலாறு நிறையவே உண்டு. அதேபோல் இவர்கள் திருமணம் செய்து ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து என்பதும் சகஜமான ஒரு விடயமாக மாறி விட்டது. அவ்வாறான ஜோடிகளில் ஒன்று தான் சமந்தா-நாக சைதன்யா தம்பதியினர்.
அந்தவகையில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'ஏ மாய சேசாவே' என்ற படத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து முதன் முறையாக நடித்தனர். அந்த படத்தில் நடித்ததில் இருந்தே சமந்தா மீது நாக சைதன்யாவுக்கு தீராக்காதல் ஏற்பட பல ஆண்டுகள் காதலித்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். அதுமட்டுமல்லது சமீபத்தில் சமந்தா மருத்துவமனையில் இருந்த போது நடிகர் நாக சைதன்யா நேரடியாக சென்று நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின.
அத்தோடு மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று அவர் கூறியதாகவும் சில பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் அடிபட்டன. இந்நிலையில் நாக சைதன்யா அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
அதில் அவர் தன்னுடைய காதல் பற்றிக் கூறியுள்ளார். அதாவது "சுமார் 7 ஆண்டுகளாக சமந்தாவை இம்ப்ரஸ் செய்ய ஏகப்பட்ட முயற்சிகள் செய்தேன் என்றும், திருமணம் செய்து கொண்டால் சமந்தாவை தான் திருமணம் செய்து கொள்வது என்கிற முடிவோடு இருந்தேன்" எனவும் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா லாக்டவுன் சமயத்தில் சமந்தாவுக்கு பிறந்தநாள் வந்த போதும், ஹோம் மேட் கேக் எல்லாம் செய்து நாக சைதன்யா தன் ஆசைக் காதலியோடு அந்த பிறந்தநாளை கொண்டாடி இருந்தாராம். இவரின் இந்த கதையைக் கேட்டதும் இப்படியான ஒரு காதல் ஜோடி திடீரென பிரிந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும் மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்தாலும், இனிமேல் அது நடக்காது என்பது போன்ற தகவல்கள் தான் தற்போது வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!