• Sep 20 2024

சமந்தா விஷயம் தொடர்பாக நாக சைதன்யா ரசிகர்களிடம் விடுத்த கோரிக்கை-என்ன திடீரென்று இப்படி சொல்லிட்டார்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நாக சைதன்யாவும், சமந்தாவும் காதல் திருமணம் செய்து பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பே இல்லையாம்.

இந்நிலையில் பேட்டிகளில் சமந்தா பற்றி நாக சைதன்யா கூறும் விஷயங்களை கேட்டு பலரும் அவரை பாராட்டுகிறார்கள். நாக சைதன்யா மீதான மரியாதை அதிகரித்துவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமந்தாவை மீண்டும் சந்தித்தால் அவருக்கு ஹாய் சொல்லி, ஹக் பண்ணுவேன் என்றார் நாக சைதன்யா. அவர் மேலும் தெரிவித்ததாவது….

என் கையில் இருக்கும் மோர்ஸ் கோடு டாட்டுவுக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அது என் திருமண நாளை குறிக்கிறது. ஆனால் ரசிகர்கள் பலரும் இதே டாட்டுவை போடுவதை பார்க்கிறேன்.

தயவு செய்து யாரும் இந்த டாட்டுவை தேர்வு செய்ய வேண்டாம். ஏனெனில் விஷயங்கள் மாறலாம், நானே கூட அந்த டாட்டுவை நீக்கலாம். அதனால் ரசிகர்கள் யாரும் அதே டாட்டுவை தேர்வு செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.

இதற்கிடையே ஆமீர் கான், நாக சைதன்யா நடித்த லால் சிங் சத்தா பாலிவுட் படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது. அத்தோடு இப் படம் பார்த்தவர்கள், நாக சைதன்யாவின் நடிப்பை பாராட்டி சமூக வலைதளங்களில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement