சமந்தா மற்றும் நாகசைத்தன்யாவின் பிரிவு துரதிர்ஷ்டமானது அதைப் பற்றி நாம் தொடர்ந்து கவலைப்பட தேவையில்லை என நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வரம் வருபவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் யசோதா சகுந்தலம் குஷி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவை விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. அத்தோடு இந்த திரைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது
மேலும் இவர் பிரபல நடிகரான நாகசைத்தன்யாவைக் காதலித்து திருமணம் செய்தார். இருப்பினும் சில ஆண்டுகளிலேயெ இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டுப் பிரிந்து கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
அவர்களது பிரிவு பற்றி இன்னமும் ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்களது பிரிபு பற்றி நாகசைதன்யாவின் அப்பாவான நடிகர் நாகார்ஜுனாவிடம் கேட்ட கேள்விக்கு, “நாகசைதன்யா, சமந்தா பிரிவு துரதிர்ஷ்டமான ஒன்று. அதைப் பற்றி நாம் தொடர்ந்து கவலைப்பட வேண்டியதில்லை. அது முடிந்துவிட்ட ஒன்று. அது எங்களது வாழ்க்கையை விட்டு வெளியேறிவிட்டது.
ஒரு நாள் அது மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்தும் வெளியேறும். நாகசைதன்யா, சமந்தாவை பிரிந்த போது எங்களால் அவருடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. ஆனால், அவர் இப்போது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்,” என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!