நாக சைதன்யா, அரவிந்த் சாமி, சரத்குமார், கீர்த்தி ஷெட்டி, பிரியாமணி உள்ளிட்ட பலரது நடிகப்பில் இயககுநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் கஸ்ரடி.இப்படத்தில் சைத்தன்யா சிவா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்படி 1996ஆம் ஆண்டு பின்னணியில் தொடங்கும் கதையில் ஆந்திராவின் ஒரு சிறிய நகரத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் சிவா இருக்கிறார்.
முதல்வர் தொடர்பான அனைத்து ரகசியங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ராசுவை சிபிஐ அதிகாரி ஒருவர் கையும் களவுமாக பிடிக்கிறார். ராசு வாய் திறந்தால் பிரச்சனை என்பதை தெரிந்து கொண்ட முதலமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை தீர்த்துக்கட்ட முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் ராசுவை காப்பாற்ற உள்ளே வரும் நாகசைத்தன்யா.
அரசு வேலையில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக வேலை பார்க்கும் நபராக நடித்திருக்கிறார் . அதன் பின்னர் சிபிஐ அதிகாரிக்கு என்ன ஆனது? சிவாவின் ஏன் ராசுவை காப்பாற்ற வேண்டும்? உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இப்படம் பதில் அளித்துள்ளது.
வெங்கட் பிரபு எப்போதும் ஒரே ஜானரில் படமெடுக்க விரும்பாதவர். அவரால் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மாஸான படத்தை கொடுத்து இருக்கிறார். அதே போல, வைபவ், பிரேம்ஜி, ஜெய் ஆகியோரை வைத்து கலகலப்பான கோவா படத்தையும் கொடுத்த வெங்கட்பிரபு தரமான கஸ்டடி என்ற ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் கஸ்டடி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நாக சைதன்யாவின் காப் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 3 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும்நாளையும் விடுமுறை என்பதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!