• Sep 21 2024

சமந்தாவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் நாகசைத்தன்யா- வாய்ப்பு கிடைத்தால் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று சொல்லுவாராம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தான் சமந்தா மற்றும் நாகசைத்தன்யா. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் இணைந்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு உத்தியோகப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது திரையுலகினருக்கும் ஷாக்கிங் நியூஸ் ஆக இருந்தது. இருப்பினும் இருவரும் கெரியரில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.


மேலும் சமந்தா விவாகரத்திற்குப் பிறகு தான் வேற லெவலில் முண்ணனி நடிகையாக உயர்ந்துள்ளார்.அதுவும் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்லுறியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தார்.

இவர் அண்மையில் நடிகர் அக்ஷய குமாருடன் காபி வித் கரண் ஷோவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.அந்த ஷோவில் இனி காதல் எப்போதும் வரவே வராது என சமந்தா கூறி இருந்தார், மேலும் நாக சைதன்யா மீது hard feelings தற்போதும் இருக்கிறது என கசப்பான விஷயங்களை பேசினார்.

 ஆனால் விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை.இந்நிலையில் நாக சைதன்யா அளித்த ஒரு பேட்டியில் தனக்கும் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்க ஆசை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.


அது பற்றி கரண் ஜோகரிடம் கேட்டதற்கு "கண்டிப்பாக.. அவரை இந்த ஷோவில் மகிழ்ச்சியாக வரவேற்பேன். அவர் சிறப்பான நடிகர். அவரது அப்பா நாகர்ஜுனாவுக்கு நான் ஒரு பெரிய ரசிகன். அதனால் நாக சைதன்யாவை பேட்டி எடுக்க விரும்புகிறேன்" என தெரிவித்து உள்ளார்.

நாக சைதன்யா காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றால் விவாகரத்துக்கான காரணம் பற்றி வெளிப்படையாக பேசுவாரா என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement