நடிப்பிற்கு என்று தன்னை வருத்தி ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகர் தான் நடிகர் விக்ரம்.இவர் தற்போது கோலிவுட்டில் உச்ச நடிகர்களில் ஒருவர். பல வருடம் போராடி தான் அவர் சினிமாவுல வெற்றியை ருசித்தார்.
சேது படத்தின் மூலமாக அதிகம் பிரபலமான அவர், நடிப்பு திறமையின் மூலமாக பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.இதில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி மற்றும் ஹாலிவுட் நடிகர் டான் கால்டஜிரோனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
கே.ஜி.எஃப்பில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாத இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இவ்வாறுஇருக்கையில் பிரபல நடிகர் தியாகராஜன் தான் விக்ரமுக்கு தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் பிரஷாந்த் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
நெருக்கமான உறவினர்கள் என்றாலும் விக்ரம் மற்றும் தியாகராஜன் குடும்பம் ஒரு பிரச்சனை காரணமாக பேசிக்கொள்வதில்லையாம்.
Listen News!