• Sep 20 2024

ராகினியை கண்டபாட்டுக்குத் திட்டிய நமச்சி- கடும் கோபத்தில் இருக்கும் நடேசன்- தமிழ் எடுத்த முடிவு- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராகினியை அர்ஜுனின் அக்கா வாக்கிக் கூட்டிடடு வெளியே வருகின்றார். அப்போது நமச்சி தமிழை ஏற்றிக் கொண்டு பைக்கில் வந்து கொண்டிருக்கின்றார். அப்போது கிரிக்கெட் விளையாடும் சின்ன பிள்ளைகள் பந்தை அடித்த போது அது ராகினியின் வயிற்றில் பட வர தமிழ் அந்தப் பந்தைப் பிடித்து விடுகின்றார். தொடர்ந்து தமிழைக் கீழே இறங்கச் சொல்கின்றார் நமச்சி.


அத்தோடு புதப் பணக்கார அம்மா எப்பிடி இருக்கிறீங்க, தமிழை கொலைகாரன் என்று சொன்னீங்களே காணுகிற இடத்தில எல்லாம் சரஸ்வதியை திட்டிட்டே இருந்தீங்களே இப்போதான் எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சே, இப்போ பேசுங்க உன்னை மாதிரி பொண்டாட்டி கிடைச்சா காணும். ஊர்ல கெட்டது செய்யிறவன் எல்லாம் வசதியாக வாழுவான்.

உன்னை உங்க குடும்பம் எப்பிடிப் பார்தாங்க அவங்களுக்கு இப்பிடிப் பண்ணிட்டியே என்று கண்டபாட்டுக்குத் திட்டுகின்றார். இதைக் கேட்ட ராகினி கண்கலங்கி அழுகின்றார். மறுபுறம் சரஸ்வதி கோதைக்கு சாப்பாடு கொடுத்திட்டு இருக்கும் போது அங்கு தமிழும் நமச்சியும் வருகின்றனர். அப்போது நமச்சி ராகினியைக் கண்டு தான் திட்டிய விஷயத்தைச் சொல்கின்றார்.


அப்போது வீடு பார்க்கும் தரகர் வந்து வீடு பார்த்தாச்சு என்று சொல்ல கோதை எல்லோரும் ஒண்ணா இருக்கப்போறோம் என்று தானே கூட்டிட்டு வந்ததாரு. இப்ப மட்டும் எதுக்கு புது வீடு இங்க சந்தோஷமாத்தானே இருக்கிறோம் என்று சொல்ல, வசுவும் இங்க இருக்கிறது தான் சந்தோஷமாக இருக்கு என்று சொல்ல தமிழ் உங்க இஷ்டம் அப்போ எல்லோரும் ஒன்றாகவே இருப்போம் என்று சொல்கின்றார்.

தொடர்ந்து வசு வீதியால் வர காண்பவர்கள் எல்லோரும் இவ தான் குடும்பத்தை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கின பொண்ணு என்று சொல்ல ராகினி ஒன்றும் புரியாமல் யோசிச்சுக் கொண்டு வருகின்றார். அப்போது அந்த வழியால் அபி வர அபியிடம் பேச போக அபி ராகினியைத் திட்டுகின்றார். அர்ஜுன் செய்த துரோகத்தை கூட அம்மா மறந்திடுவாங்க ஆனால் நீங்க பண்ணினது தான் அவங்களால ஏற்றுக் கொள்ளவே முடில என்று திட்டி விட்டுச் செல்கின்றார்.


மறுபுறம் அர்ஜுனை எப்படியாவது ஜெயிலில் தள்ள வேண்டும் என்பதற்காக நடேசனும் கார்த்திக்கும் அர்ஜுனைப் பார்க்கப்போகின்றனர். அவர் இந்த கேஸில் இருக்கும் சிக்கல்களைச் சொல்கின்றார். இதைக் கேட்டுக் கொண்டு வந்த நடேசன் வீட்டில் சொல்கின்றார். ராகினியையும் சும்மா விடமாட்டேன் என்று திட்டுகின்றார். அப்போது அபியுமட வந்து ராகினியிடம் பேசிய விஷயத்தைச் சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement