தமிழ் சினிமாவில் கிளாமர் குயினாகவும், கவர்ச்சிக் கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை நமீதா. அதுமட்டுமல்லாது இவர் ரசிகர்களை பார்த்து 'மச்சான்' என்ற வார்த்தையை கூறி ஏராளமான இளைஞர் பட்டாளத்தை ஈர்த்து வந்தவர்.
பல படங்களிலும் தன்னுடைய கவர்ச்சி நடிப்பினை வெளிப்படுத்தி வந்த நமீதா திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையிலும் இணைந்து விட்டார். தற்போது படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் வீட்டில் இருந்து வந்த நமீதா சமீபத்தில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.
சினிமாவில் மட்டுமன்றி அரசியலிலும் ஈடுபட்டு வந்த நமீதா, அதிமுக கட்சியின் செய்தி பரப்பாளராக பணியாற்றி பல கூட்டங்களில் பேசி வந்தார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடத்திய கூட்டம் ஒன்றிலும் நமீதா பேசியிருந்தார்.
அந்தக் கூட்டத்தின் போது ஜெயலலிதா கூட்டத்திற்கு வந்த மக்களை பார்த்து கையசைத்திருக்கிறார். அந்த சமயத்தில் மேடையில் இருந்த நமீதா ஜெயலலிதாவுடன் சேர்ந்து தானும் கையசைத்துள்ளார். அதை தொடர்ந்து ரசிகர்கள் கத்தியதை பார்த்த ஜெயலலிதா கடுங்கோபத்தில் இருந்துள்ளார்.
நமீதாவின் இந்த செயல் பிடிக்காததால் உடனே ஜெயலலிதா, நமீதாவை இனிமேல் எந்த கூட்டத்திற்கும் கூப்பிட கூடாது என்று கண்டீசன் போட்டுள்ளார். ஒரு கூட்டத்திற்கு மட்டும் தலா 5 லட்சம் வாங்கி வரும் நமீதா, 20 கூட்டத்திற்கு பேச கமிட்டாகி இருந்தார்.
ஜெயலலிதா செய்த இந்த வேலையினால் பல கோடி பறிபோனதாக நமீதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த விடயமானது தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
Listen News!