• Sep 20 2024

நம்ம கீர்த்தி சுரேஷா இது-சொக்கிப் போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த 2013-ல் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இவருக்கு இந்த முதல் படம் சிறந்த அடித்தளமாக அமைந்தது.

தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் சிறந்த நடிப்பினால் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் முதலான நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.

தற்போது நடிகைகள் பொதுவாக தனி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை கீர்த்தியும் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சமீபத்தில்,நடிகை கீர்த்தி சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபாவுக்கு ஜோடியாகவும், சாணிக்காகிதம் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றார்.

அத்தோடு நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்வார்.

மேலும் அந்த வகையில தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக் அப் ஏதும் இல்லாமல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் கீர்த்தி எப்படி இருந்தாலும் அழகு தான் என வர்ணித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement