• Sep 20 2024

ஆதிரையைத் தேடும் கரிகாலன்... ஹாலிற்கு வந்த நந்தினிக்கு காத்திருந்த அதிர்ச்சி... கையும் களவுமாக சிக்குவாரா..? விறுவிறுப்பான 'Ethirneechal' Episode..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் மறுநாள் காலை நந்தினி முதியோர் இல்லத்திற்கு சமைக்கும் ஆர்டரை இன்ரிலிருந்து தொடங்கப் போவதால் அனைத்தையும் சமைத்து கடவுளிற்குப் படைத்தது விட்டு ஈஸ்வரி மற்றும் நந்தினியிடம் டேஸ்ட் பார்க்க சொல்கிறார். அவர்களும் நன்றாக இருப்பதாகப் புகழ்கின்றனர்.


இதனையடுத்துப் பின்னர் சக்தியிடம் ஜனனி சமைத்த உணவுகளை வெளியே கொண்டு வருமாறு கூறுகின்றார். ஆனால் ஜனனி திடீரென "தெரிந்த வண்டி வேண்டாம் அதனால் வேற ஏதாவது வண்டியை புக் செய்கிறேன். வண்டி வந்ததும் நான் சொல்கிறேன்" எனக் கூறிச் செல்கின்றார்.

கூடி இருந்த வீட்டுப் பெண்கள் அனைவரும் நந்தினி கல்யாணம் முடிந்துவந்த புதிதில் கிண்டிய உப்புமாவை பற்றி சொல்லி அவரைக் கிண்டல் அடிக்கின்றார்கள். அவ்வாறிருந்த நந்தினி இன்று இந்தளவிற்கு சமைக்கும் அளவிற்கு மாறிவிட்டார் எனக் கூறிப் புகழ்கின்றனர்.

பின்னர் விசாலாட்சியிடம் சொல்லுமாறு ரேணுகா நந்தினியிடம் சொல்ல "வேண்டாம் முதல் நாள் நல்லபடியா போகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம். அவங்க ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிடியாகவே இருக்குறாங்க. திடீர்ன்னு என்னோட பிள்ளைகளுக்கு தெரியாம உனக்கு என்னடி பிசினஸ் வேண்டி கிடக்குன்னு சொல்லிட்டாங்கன்னா?" எனக் கூறுகின்றார்.


இவ்வாறு வீட்டு மருமகள்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கரிகாலன் சமயலறைக்கு வருகிறார். அவர்களை பார்த்து "என்ன மாநாடா?" என கேட்டதோடு மட்டுமில்லாமல் சமைத்து வைத்த பாத்திரங்களை எல்லாம் பார்த்து விடுகிறான். "இது பரண் மேல இருந்து எடுத்த பாத்திரங்கள் போல இல்லையே. எனக்கு தெரியாம ஏதாவது திருட்டுத்தனம் பண்றீங்களா? இன்னைக்கு உன்னை பார்த்தாலே பக்தி பரவசமா இருக்கே" என நந்தினியை பார்த்து சந்தேகத்துடன் கரிகாலன் கேட்கின்றார்.


மேலும் "ஆதிரை எங்கே" எனவும் கரிகாலன் கேட்கிறார். பதிலுக்கு அவர்கள் "ஆதிரை அவளுடைய தோழி ஒருத்தியைப் பார்க்க காலேஜ் சென்றுள்ளதாகவும் சீக்கிரம் வந்துவிடுவாள்" எனக் கூறி அனுப்புகிறார்கள். இதனையடுத்து ஜனனி ஒழுங்கமைத்த வண்டி வந்துவிடுகிறது. 

உடனே ஜனனி சக்திக்கு போன் செய்து "வண்டி வந்துவிட்டது. பாத்திரங்களை எல்லாம் வெளியில் கொண்டு வாங்க" என்கிறார். அதற்கு நந்தினி ஒரு முறை யாராவது ஹாலில் இருக்கிறார்களா என பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என சொல்லிவிட்டு வெளியே வந்து பார்க்கிறாள். அந்தசமயத்தில் கரிகாலன் மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருக்கிறார். இதனைப் பார்த்து நந்தினி சற்று அதிர்ச்சி அடைகின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement