சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஈஸ்வரி சக்தியை வீட்டிற்கு வெளியே வைத்துக் குளிக்க வாற்றுக் கொண்டிருக்கின்றார். அதைப் பார்த்த குணசேகரன் "ஓஹோ, கண்காட்சியா வியாதி எல்லாம் அதைக் கொண்டாடக் கொண்டாடத்தான் நம்ம மேல் ஒட்டிக் கொண்டிருக்கும்" என்கிறார்.
பதிலுக்கு நந்தினி "எல்லாரும் உங்கள மாதிரி இல்லைத்தானே மாமா, நாங்க மனுஷப் பிறவிங்க, நீங்க தெய்வப் பிறவி" என சமயம் பார்த்துக் கிண்டலாக கூறுகின்றார்.
மறுபுறம் பெரியவர் ஒருவர் ஜனனியிடம் "ஜீவானந்தம் இன்னைக்கு உன்னைய பார்க்க வாறாரு, நான் வழி காண்பித்துத் தாறேன், அவரைப் போய் பார்த்திட்டு வந்திடம்மா" எனக் கூறி ஜனனியை ஜீவானந்தத்திடம் அழைத்துச் செல்கின்றார்.
மறுபுறம் ஜீவானந்தம் வந்து கொண்டிருக்கின்றார். அப்போது கதிர் அவரைப் பழிவாங்கி அவரின் உயிரைப் பறிப்பதற்காக காத்துக் கொண்டு நிற்கின்றார். இவர்களிடம் மாட்டப் போவது ஜனனியா..? ஜீவானந்தமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,
Listen News!